default-logo
உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு
(ஆமோஸ் 4:12)
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு

2.26.பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது


பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது


அப்புறம் நான் என் சொப்பனத்தில், பிரயாணிகள் எல்லாரும் ஆனந்தமலைக்கு இந்தப்புறத்தில் இருந்த ஆற்றங்கரையைச் சேர்ந்ததாகக் கண்டேன்.

இரு கரையிலும் இலை உதிரா மரமுள்ளதும், பசும்புல் மைதானத் தால் சூழப்பட்டதும், “கம்” என்று மணமுள்ள புஷ்பங்களால் இலங்கினதும், சாங்கோபாங்கமாய் படுத்து உருண்டு சந்தோசப்பட நல்ல இடமுமான அந்த இன்ப நதியண்டைதான் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். (சங்கீதம் 23 : 2)

இந்த ஆற்றோரம் இருந்த பசும்புல் மைதானத்தில் ஆடுகள் தங்குவதற்கு ஏற்ற கிடைகளும், தொழுவங்களும், மோட்ச பயணம் போகும் ஸ்திரீகள் பெற்ற பாலகராகிய ஆட்டுக்குட்டிகளை பேணிப் போஷித்து வளர்ப்பதற்கு ஏற்றகுடில்களும், பட்டிகளும் கட்டப்பட்டு இருந்தன. அந்த குட்டிகள்மேல் மனதுருகி அவைகளை தமது புயத்தி னால் சேர்த்து தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துகிறவரான ஒருவருடைய விசாரணைக்குள் அவைகள் ஒப்பு விக்கப்பட்டிருந்தன. (எபிரேயர் 5 : 2 ஏசாயா 46 : 11)

இவருடைய விசாரணைக்குள் அவரவர் தங்கள் பிள்ளைகளை ஒப்புவிக்கவும் இந்த ஆற்றோரத்தில் அவர்கள் தங்கி தாபரித்து பின்காலத்தில் அவர்களுக்கு ஒரு குறைவும் நேரிடாதபடி இந்த இடத்தில் உண்டு வளர்ந்து படித்துத் தேறி பூரண புருஷர் ஆகும்படி அவருடைய பராமரிப்புக்குள் இருக்கவும் கிறிஸ்தீனாள் தன் மருமக்கள்மார் நாலு பேருக்கும் திட்டம் பண்ணினாள். 1 அந்த மேய்ப்பன் இவர்களில் யாராவது வழிதப்பி போய்விட்டால் அல்லது காணாமலே போனால் அவர்களை திரும்பக் கொண்டு வந்து சேர்த்து அவர்கள் முறிவுகளைக் கட்டி நோய்கொண்டவர்களை பலப்படுத்தி வருவார். (எரேமியா 23 : 4 எசேக் 34 11 – 16) அன்னம் தண்ணீரை குறித்தாவது வஸ்திராபரணங்களை குறித்தாவது அவர்கள் இந்த இடத்தில் கவலைப்படவேண்டியதாய் இருந்ததில்லை. திருடரைக் குறித்தாவது, கொள்ளைக்காரரைப் பற்றியாவது இந்த இடத்தில் ஒரு பயமுமில்லை. ஏனெனில் இவர்களை விசாரிக்கிறவர் தமது குட்டிகளில் ஒன்றை இழந்து போவதிலும் தாமே தமது உயிரை கொடுத்துவிடுவார். மேலும் இவர்கள் கர்த்தருக்கு ஏற்ற பயத்திலும்,கண்டிப்பிலும் வளர்க்கப்பட்டு நேர்மையும் செவ்வை யுமான பாதையில் நடக்கப் பழக்குவிக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட வளர்ப்பு இலகுவில் கிடைக்கமாட்டாது என்று நீ அறிவாயே. மேலும் இந்த இடத்தில் தெளிந்த தண்ணீரும், சிறந்த மைதானமும், மணக்கும் புஷ்பங்களும் பலவித கனிகளைத் தரும் பல ஜாதி விருட்சங்களும் இருக்கின்றன. இங்கு உள்ள பழங்கள் எப்படிப்பட்டது? பெயல் செபூலின் தோட்டத்தில் இருந்து சுவருக்கப்பால் தொங்கி, மத்தேயு பிடுங்கித் தின்று அவஸ்தை பட்டானே, அப்படிப்பட்ட பழங்களோ? அல்ல, அல்ல. சுகம் அற்றோருக்கு சுகமும், சுகம் உள்ளவர்களுக்கு இருக்கிற பலத்தோடு அதிக பலமும் கொடுக்கத்தக்கதான பழங்களே இங்கே பழுத்தன. ஆதலால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை அந்த இடத்தில் ஒப்புவிக்கத் தீர்மானித்தார்கள். அவர்களுக்கு செல்லும் செலவு என்ன உண்டோ அவ்வளவும் ராஜமானியப் பொக்கிஷத்தில் இருந்து இலவசமாய் கொடுக்கப்பட்டு வந்ததாலும், ஆதரவற்ற பரதேசிகளின் பிள்ளைகளுக்கு அது ஒரு கல்விச்சாலை போலும், வைத்தியசாலை போலவும் இருந்ததாலும் அவர்கள் தங்கள் பிள்ளைகளை பூரண மன உற்சாகத்தோடு அந்த இடத்தில் இருந்த மேல் விசாரணைக்காரரிடம் ஒப்புவிக்கும்படி அதிகமாய் ஏவப் பட்டார்கள்.

அப்புறம் அவர்கள் தங்கள் வழியே நடந்து போனார்கள். அவர்கள், கிறிஸ்தியானும், திடநம்பிக்கையும் ஏறிப்போய் சந்தேக அரண்மனைக்குள் அடைக்கப்படும் கைதிகளாக வழிதப்பி அகோர பயங்கர ராட்சதனால் பிடிபட்ட மைதானத்திற்குப் போகும் படிக் கட்டுப் பாதையண்டை வந்து சேர்ந்ததாக நான் என் சொப்பனத்தில் கண்டேன்.


1. நாம் குழந்தைகளை இயேசு கிறிஸ்துவின் ஆதரவுக்கும், அரவணைப் புக்கும் ஒப்புக்கொடுப்பதின் அவசியத்தை இதில் கற்றுக்கொள்ளுகிறோம். அவர்கள் இளமையாய் இருக்கையில்தானே அவர்கள் இருதயத்துக்குள் பாவவெறுப்பும், தீமைக்கு விலகும் தன்மையும் உண்டாகும்படி செய்யவேண்டும். வாலிபத்தில் நாம் எடுக்கும் அந்த தீர்மானமே நன்மையா னாலும், தீமையானாலும் அதுவே ஜீவநாள் பரியந்தம் நிலை கொண்டிருக்கும்.

மோட்ச பிரயாணம்

  • மோட்ச பிரயாணம்
  • தலையங்கச் செய்தி
  • முகவுரை: சாமுவேல் பவுல் ஐயர்
  • 1.1.பிரயாண ஆவல்
  • 1.2.சுவிசேஷகனின் முதலாம் சந்திப்பு
  • 1.3.திட்டிவாசல் பயணம்
  • 1.4.வன சம்பாஷணை
  • 1.5.நம்பிக்கையிழவின் அவதி
  • 1.6.லோகஞானி சந்திப்பு
  • 1.7.சுவிசேஷகனின் இரண்டாம் சந்திப்பு
  • 1.8.திட்டிவாசல் கோட்டை சேருதல்
  • 1.9.வியாக்கியானி வீடு சேருதல்
  • 1.10.பிரயாணியின் சிலுவைத் தரிசனை
  • 1.11.பிரயாணி கஷ்டகிரி சேருதல்
  • 1.12.பிரயாணி சுருளை இழத்தல்
  • 1.13.பிரயாணி சிங்கார மாளிகை சேருதல்
  • 1.14.அப்பொல்லியோன் சந்திப்பு (தாழ்மைப் பள்ளம்)
  • 1.15.பிரயாணி மரண நிழலின் பள்ளத்தாக்கைக் கடத்தல்
  • 1.16.பாப்பு ராஷதன் சந்திப்பு
  • 1.17.கிறிஸ்தியான் உண்மையோடு கூடுதல்
  • 1.18.வாயாடி வந்து கூடுதல்
  • 1.19.சுவிசேஷகரின் மூன்றாம் சந்திப்பு
  • 1.20.பிரயாணிகள் மாயாபுரி சேருதல்
  • 1.21.பிரயாணிகள் உபாயியை சந்தித்தல்
  • 1.22.உபாயியின் தோழர் சந்திப்பு
  • 1.23.பிரயாணிகள் திரவியகிரி சேருதல்
  • 1.24.பிரயாணிகள் தேவ நதி சேருதல்
  • 1.25.பிரயாணிகள் பக்கத்து வழி மைதானம் திரும்புதல்
  • 1.26.அகோர பயங்கர ராட்சதன் பிரயாணிகளைப் பிடித்தல்
  • 1.27.பிரயாணிகள் ஆனந்த மலை சேருதல்
  • 1.28.பிரயாணிகள் அறிவீனனைச் சந்தித்தல்
  • 1.29.பிரயாணிகள் முகஸ்துதியை சந்தித்தல்
  • 1.30.நாஸ்திக சாஸ்திரி சந்தித்தல்
  • 1.31.மயக்க பூமியில் பிரயாணிகள் நடத்தல்
  • 1.32.அறிவீனனை மறுபடியும் சந்தித்தல்
  • 1.33.சொற்பகாலம் என்பவரை பற்றிய சம்பாஷணை
  • 1.34.பிரயாணிகள் வாழ்க்கைநாடு சேருதல்
  • 1.35.பிரயாணிகள் நதியைக் கடத்தல்
  • 1.36.பிரயாணிகள் மோட்சம் ஏறுதல்
  • 1.37.பிரயாணிகள் மோட்சம் சேருதல்
  • 1.38.அறிவீனனுடைய முடிவு
  • 2.கிறிஸ்தீனாளின் மோட்ச பிரயாணம்
  • 2.1.கூரியபுத்தி பிரசன்னம்
  • 2.2.கிறிஸ்தீனாளின் பிரயாண ஏவுதல்கள்
  • 2.3.அந்தரங்கன் அவளைச் சந்தித்தது
  • 2.4.கிறிஸ்தீனாளின் பிரயாண ஆயத்தம்
  • 2.5.கிறிஸ்தீனாளின் மோட்ச பயணம்
  • 2.6.பிரயாணிகள் நம்பிக்கையிழவு உளை சேர்ந்தது
  • 2.7.அவர்கள் திட்டிவாசல் சேர்ந்தது
  • 2.8.இடுக்கமான வழிப் பயணம்
  • 2.9.பிரயாணிகள் வியாக்கியானி வீடு சேர்தல்
  • 2.10.அலங்கார மாளிகைப் பிரயாணம்
  • 2.11.பிரயாணிகள் கஷ்டகிரி வந்து சேர்ந்தது
  • 2.12.அலங்கார மாளிகை வந்து சேர்ந்தது
  • 2.13.அலங்கார மாளிகையை விட்டு புறப்படுதல்
  • 2.14.தாழ்மை என்னும் பள்ளத்தாக்கு
  • 2.15.மரண நிழலின் பள்ளத்தாக்கு
  • 2.16.சங்கார ராட்சதனை சந்தித்தல்
  • 2.17.யதார்த்தனுடன் கூடுதல்
  • 2.18.அச்சநெஞ்சனைப் பற்றிய சம்பாஷணை
  • 2.19.தன்னிஷ்டத்தைப் பற்றிய சம்பாஷணை
  • 2.20.பரோபகார காயுவின் சத்திரம் சேருதல்
  • 2.21.பிரயாணிகள் பரோபகார காயு மடம் விட்டது
  • 2.22.பூர்வ பிரயாணிகளைப் பற்றிய சம்பாஷணை
  • 2.23.பிரயாணிகள் மாயாபுரி மினாசோன் வீடு வந்து சேர்ந்தது
  • 2.24.வலுசர்ப்பத் தொல்லை
  • 2.25.பிரயாணிகள் மாயாபுரியை விட்டது
  • 2.26.பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது
  • 2.27.அகோர பயங்கர ராட்சதனை சங்காரம் செய்தல்
  • 2.28.பிரயாணிகள் ஆனந்தமலை சேருதல்
  • 2.29.சத்திய வீரதீரனை சந்தித்தல்
  • 2.30.பிரயாணிகள் மயக்க பூமி சேர்தல்
  • 2.31.பிரயாணிகள் வாழ்க்கை நாடு சேருதல்
  • 2.32.கிறிஸ்தீனாளின் மரணம்
  • 2.33.மற்ற பிரயாணிகளின் முடிவு
  • 3.ஜாண் பன்னியன்
  • 3.1.மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து பாதுகாத்த தேவ கரம்
  • 3.2.தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்
  • 3.3.ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது
  • 3.4.ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்
  • 3.5.ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை
  • 3.6.தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்
  • 3.7.”என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்”
  • 3.8.ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு




Copyright © www.devaekkalam.com. All Rights Reserved.