default-logo
உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு
(ஆமோஸ் 4:12)
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு

2.25.பிரயாணிகள் மாயாபுரியை விட்டது


பிரயாணிகள் மாயாபுரியை விட்டது


அவர்கள் மாயாபுரியிலிருந்து புறப்பட்டார்கள். அவர்களுடைய சிநேகிதர் அவர்களை வழியனுப்பும்படி கொஞ்ச தூரம் போய் பிரயாணிகள் ஒவ்வொருவரையும் தங்கள் அரசரின் அன்புள்ள கிருபை நிறைந்த பாதுகாவலின் கரத்துக்குள் ஒப்புவித்து தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள்.

பிரயாணிகள் எல்லாரும் ஏகமாய் புறப்பட்டு வழிநடந்தார்கள். அவர்களுக்கு முன்னே தைரிய நெஞ்சன் போனார். அந்த ஸ்திரீகளும், பிள்ளைகளும் பெலவீனராய் இருந்ததால் அவர்கள் அலுத்துப் போகாதபடி எவ்வளவு தூரம் போகக்கூடுமோ அவ்வளவு தூரம்தான் நடந்து போனார்கள். அதிக நடை நடக்க அவர்களால் இயலாததை கண்ட நொண்டியும், ஏழைத்தனமும் அவர்கள் மேல் அனுதாபம் கொண்டார்கள்.

அவர்கள் ஊரைக் கடந்து வழிவிட வந்த சிநேகிதரையும் விட்டுத் தனிப்பட்டவுடனே தீவிரமாய் நடந்து உண்மை இரத்த சாட்சியாய் மாண்ட இடத்தண்டை வந்து சேர்ந்தார்கள். அவர்கள் அந்த இடத்தில் சற்று நேரம் தாமதித்து நின்று, அவர் தம்முடைய சிலுவையை பொறுமையோடு சுமந்து சாகும்படி தயை அருளின தயாபரரை துதித்தார்கள். ஏனெனில் அவர் விசுவாசத்தில் வல்வராக விளங்கி அந்த இடத்தில் மாண்டதால் அநேக நன்மைகள் மாயாபுரியில் உண்டானது என்ற உணர்வு அவர் மனதை ஏவி எழுப்பிற்று.

அப்புறம் அவர்கள் கிறிஸ்தியானையும், உண்மையையும் பற்றிப் பேசி, கிறிஸ்தியானோடு திடநம்பிக்கை கூடிக்கொண்ட விபரங்களை குறித்து சம்பாஷித்து வெகுதூரம் நடந்துபோனார்கள்.

அதின்பின்பு அவர்கள்: தேமாஸ் பயணத்தை தடுத்து விட்டதும், உபாயி விழுந்து மாண்டதாக சிலர் அனுமானிக்கிறதுமான வெள்ளிக் கேணியுள்ள திரவியகிரியண்டை வந்து சேர்ந்து, அவன் தன்மையைக் குறித்து மன தியானம் செய்து கொண்டு நின்றார்கள்.

பின்னும் அவர்கள் சற்று எட்டி நடந்து, திரவியகிரிக்கு எதிரே வழியோரமாய்ச் சோதோமின் எல்லைக்குள்ளும் சவக்கடலின் பள்ளத்தாக்குக்குள்ளும் இருந்த பழைய உப்புத்தூணண்டை வந்தவுடனே, அவர்கள் எல்லாரும் கிறிஸ்தியானைப் போல அதிசயப்பட்டு, தேமாஸையும், உபாயியையும் போலொத்த அவ்வளவு அறிவாளிளும், விவேகிகளும் இவ்வண்ணம் மதிகெட்டு மாண்டு போனார்களே என்று உணர்ந்து கொண்டார்கள்.1 அதினோடுகூட இந்தக் காட்சியால் உண்டாகும் போதனையை ஒருவன் தன் மூடாந்த காரமான கண்ணால் பார்க்கும்போது அவனுடைய மாமிச சுபாவம் மற்றவர்களுக்கு உண்டான ஆபத்தை உணர்ந்து கொள்ளுகிறதில்லை என்றும் ஆலோசித்துக் கொண்டார்கள்.


1. எவ்வளவு அறிவும் சாமர்த்தியமும் ஒருவனுக்கு இருந்தாலும் அதைக்கொண்டு அவன் தீமை செய்யாமல் இருக்கவேண்டும். அறிவும், சாமர்த்தியமும் மனதிலே மாத்திரம் இருக்கின்றன. ஆனால் தீமைக்கு விலகவேண்டுமானால் இருதயம் செம்மையாய் இருக்க வேண்டும்.

மோட்ச பிரயாணம்

  • மோட்ச பிரயாணம்
  • தலையங்கச் செய்தி
  • முகவுரை: சாமுவேல் பவுல் ஐயர்
  • 1.1.பிரயாண ஆவல்
  • 1.2.சுவிசேஷகனின் முதலாம் சந்திப்பு
  • 1.3.திட்டிவாசல் பயணம்
  • 1.4.வன சம்பாஷணை
  • 1.5.நம்பிக்கையிழவின் அவதி
  • 1.6.லோகஞானி சந்திப்பு
  • 1.7.சுவிசேஷகனின் இரண்டாம் சந்திப்பு
  • 1.8.திட்டிவாசல் கோட்டை சேருதல்
  • 1.9.வியாக்கியானி வீடு சேருதல்
  • 1.10.பிரயாணியின் சிலுவைத் தரிசனை
  • 1.11.பிரயாணி கஷ்டகிரி சேருதல்
  • 1.12.பிரயாணி சுருளை இழத்தல்
  • 1.13.பிரயாணி சிங்கார மாளிகை சேருதல்
  • 1.14.அப்பொல்லியோன் சந்திப்பு (தாழ்மைப் பள்ளம்)
  • 1.15.பிரயாணி மரண நிழலின் பள்ளத்தாக்கைக் கடத்தல்
  • 1.16.பாப்பு ராஷதன் சந்திப்பு
  • 1.17.கிறிஸ்தியான் உண்மையோடு கூடுதல்
  • 1.18.வாயாடி வந்து கூடுதல்
  • 1.19.சுவிசேஷகரின் மூன்றாம் சந்திப்பு
  • 1.20.பிரயாணிகள் மாயாபுரி சேருதல்
  • 1.21.பிரயாணிகள் உபாயியை சந்தித்தல்
  • 1.22.உபாயியின் தோழர் சந்திப்பு
  • 1.23.பிரயாணிகள் திரவியகிரி சேருதல்
  • 1.24.பிரயாணிகள் தேவ நதி சேருதல்
  • 1.25.பிரயாணிகள் பக்கத்து வழி மைதானம் திரும்புதல்
  • 1.26.அகோர பயங்கர ராட்சதன் பிரயாணிகளைப் பிடித்தல்
  • 1.27.பிரயாணிகள் ஆனந்த மலை சேருதல்
  • 1.28.பிரயாணிகள் அறிவீனனைச் சந்தித்தல்
  • 1.29.பிரயாணிகள் முகஸ்துதியை சந்தித்தல்
  • 1.30.நாஸ்திக சாஸ்திரி சந்தித்தல்
  • 1.31.மயக்க பூமியில் பிரயாணிகள் நடத்தல்
  • 1.32.அறிவீனனை மறுபடியும் சந்தித்தல்
  • 1.33.சொற்பகாலம் என்பவரை பற்றிய சம்பாஷணை
  • 1.34.பிரயாணிகள் வாழ்க்கைநாடு சேருதல்
  • 1.35.பிரயாணிகள் நதியைக் கடத்தல்
  • 1.36.பிரயாணிகள் மோட்சம் ஏறுதல்
  • 1.37.பிரயாணிகள் மோட்சம் சேருதல்
  • 1.38.அறிவீனனுடைய முடிவு
  • 2.கிறிஸ்தீனாளின் மோட்ச பிரயாணம்
  • 2.1.கூரியபுத்தி பிரசன்னம்
  • 2.2.கிறிஸ்தீனாளின் பிரயாண ஏவுதல்கள்
  • 2.3.அந்தரங்கன் அவளைச் சந்தித்தது
  • 2.4.கிறிஸ்தீனாளின் பிரயாண ஆயத்தம்
  • 2.5.கிறிஸ்தீனாளின் மோட்ச பயணம்
  • 2.6.பிரயாணிகள் நம்பிக்கையிழவு உளை சேர்ந்தது
  • 2.7.அவர்கள் திட்டிவாசல் சேர்ந்தது
  • 2.8.இடுக்கமான வழிப் பயணம்
  • 2.9.பிரயாணிகள் வியாக்கியானி வீடு சேர்தல்
  • 2.10.அலங்கார மாளிகைப் பிரயாணம்
  • 2.11.பிரயாணிகள் கஷ்டகிரி வந்து சேர்ந்தது
  • 2.12.அலங்கார மாளிகை வந்து சேர்ந்தது
  • 2.13.அலங்கார மாளிகையை விட்டு புறப்படுதல்
  • 2.14.தாழ்மை என்னும் பள்ளத்தாக்கு
  • 2.15.மரண நிழலின் பள்ளத்தாக்கு
  • 2.16.சங்கார ராட்சதனை சந்தித்தல்
  • 2.17.யதார்த்தனுடன் கூடுதல்
  • 2.18.அச்சநெஞ்சனைப் பற்றிய சம்பாஷணை
  • 2.19.தன்னிஷ்டத்தைப் பற்றிய சம்பாஷணை
  • 2.20.பரோபகார காயுவின் சத்திரம் சேருதல்
  • 2.21.பிரயாணிகள் பரோபகார காயு மடம் விட்டது
  • 2.22.பூர்வ பிரயாணிகளைப் பற்றிய சம்பாஷணை
  • 2.23.பிரயாணிகள் மாயாபுரி மினாசோன் வீடு வந்து சேர்ந்தது
  • 2.24.வலுசர்ப்பத் தொல்லை
  • 2.25.பிரயாணிகள் மாயாபுரியை விட்டது
  • 2.26.பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது
  • 2.27.அகோர பயங்கர ராட்சதனை சங்காரம் செய்தல்
  • 2.28.பிரயாணிகள் ஆனந்தமலை சேருதல்
  • 2.29.சத்திய வீரதீரனை சந்தித்தல்
  • 2.30.பிரயாணிகள் மயக்க பூமி சேர்தல்
  • 2.31.பிரயாணிகள் வாழ்க்கை நாடு சேருதல்
  • 2.32.கிறிஸ்தீனாளின் மரணம்
  • 2.33.மற்ற பிரயாணிகளின் முடிவு
  • 3.ஜாண் பன்னியன்
  • 3.1.மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து பாதுகாத்த தேவ கரம்
  • 3.2.தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்
  • 3.3.ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது
  • 3.4.ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்
  • 3.5.ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை
  • 3.6.தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்
  • 3.7.”என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்”
  • 3.8.ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு




Copyright © www.devaekkalam.com. All Rights Reserved.