default-logo
உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு
(ஆமோஸ் 4:12)
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு

1.37.பிரயாணிகள் மோட்சம் சேருதல்


பிரயாணிகள் மோட்சம் சேருதல்


வாசலண்டை சேரவே அதின் மேலே: “ஜீவ விருட்சத்தின் மேல் அதிகாரமுள்ளவர்கள் ஆகிறதற்கும் வாசல்கள் வழியாய் நகரத்துக்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்” என்கிற வாசகம் பொன் எழுத்தில் எழுதப்பட்டிருக்கக் கண்டார்கள். (வெளி 22 : 14)

பின்பு நான் என் சொப்பனத்தில் கண்டது என்னவென்றால் அந்த ஒளிமயரூபிகள் பிரயாணிகள் இருவரையும் நோக்கி: நீங்கள் வாசல் ஓரமாய் வந்து உள்ளே இருக்கிறவர்களைக் கூப்பிடுங்கள் என்றார்கள். அப்படியே கூப்பிட்டார்கள். உடனே ஏனோக்கு, மோசே, எலியா முதலானவர்கள் மேலேயிருந்து எட்டிப் பார்த்தார்கள். அப்பொழுது அவர்களுக்கு இந்தப் பிரயாணிகள், இந்த நகரத்தின் எஜமான் மேலுள்ள அன்பால் ஏவப்பட்டு நாசபுரியில் இருந்து வந்திருக்கின் றார்கள் என்று சொல்லப்பட்டது. அதோடு பிரயாணிகள் இருவரும் தங்கள் யாத்திரையின் ஆரம்பித்தில் அவரவர் பெற்றுக்கொண்ட நற்சாட்சி பத்திரங்களையும் 1 அவர்களுக்குக் கொடுத்தார்கள். அந்தப் பத்திரங்கள் ராஜ சமூகத்தில் கொண்டு போகப்பட்டன.

அரசன் அதை வாசித்துப் பார்த்து: அந்த மனிதர் எங்கே? என்று கேட்டார். அதோ வாசலுக்கு வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது. உடனே அவர்: “சத்தியத்தை கைக்கொண்டு வருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்” (ஏசாயா 26 : 2) என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அப்பொழுது நான் என் சொப்பனத்தில் அவர்கள் இருவரும் வாசலுக்குள் பிரவேசித்ததைக் கண்டேன். இதோ அவர்கள் பிரவேசிக்கும்போதே மறுரூபமடைந்து பொன்மயமான அங்கியால் உடுத்தப்பட்டார்கள். சுரமண்டங்களைப் பிடித்தவர்களும் கிரீடம் தரித்தவர்களுமான எண்ணிறந்த பேர் அவர்களைச் சந்திக்க வந்து அவர்கள் தங்களோடு கூடி ஸ்துதிக்கும்படி சுரமண்டலங்களைக் கொடுத்து அவர்களைக் கனப்படுத்தும்படியாக கிரீடமும் சூட்டி னார்கள். அந்த நிமிஷமே பரமண்டலத்து மணிகள் எல்லாம் தங்கள் நாதங்களை மறுபடியும் அடித்து முழக்கவும் “உங்கள் எஜமானுடைய சந்தோசத்துக்குள் பிரவேசியுங்கள்” (மத்தேயு 25 : 23) என்கிற சத்தம் தொனிக்கவும் என் சொப்பனத்திலே கேட்டேன். மேலும் அந்தப் பிரயாணிகள் இருவரும் “சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பவருக்கும், ஆட்டுக் குட்டியான வருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக” (வெளி 5 : 13, 14) என்று சொல்லி உரத்த சத்தமாய் பாடுகிறதையும் நான் கேட்டேன்.

அவர்கள் பிரவேசிக்கும்படியாக வாசல்கள் திறக்கப்பட்ட சமயத்தில் அவர்களுக்குப் பின்னாலே எட்டிப் பார்த்தேன். இதோ அந்த நகரம் ஜோதிமயமாய் விளங்கிற்று. அதின் வீதிகள் முதலாய் பொன் தளம் போடப்பட்டதாய் இருந்தன. அதின் வழியாய்ச்சிரசில் கிரீடம் அணிந்தவர்களாயும், சங்கீதம் பாடும்படியாக கையில் குருத்தோலைகளையும், பொன் சுரமண்டலங்களையும் பிடித்தவர்களாயும் அங்கும் இங்கும் உலாவித்திரிகிற ஆயிரமாயிரம் பேரையும் நான் கண்டேன்.

செட்டைகளுள்ள பேர்கள் பலரையும் நான் அங்கே கண்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர் முகமாய் நின்று ஓய்வில்லாமல் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று சொல்லிப் பாடினார்கள். இதின்பின் அந்த வாசல் அடைக்கப் பட்டது. அந்த மகத்துவங்களைக் கண்டு நானும் அங்கே போயி ருந்தேன் இல்லையே என்று அதிக ஆவல் கொண்டேன்.


1. நற்சாட்சி பத்திரங்கள் என்பது, இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தையும் அதோடு பின்தொடருகிற பரிசுத்தமாக்கப்படுதலையும் குறிக்கிறது.

மோட்ச பிரயாணம்

  • மோட்ச பிரயாணம்
  • தலையங்கச் செய்தி
  • முகவுரை: சாமுவேல் பவுல் ஐயர்
  • 1.1.பிரயாண ஆவல்
  • 1.2.சுவிசேஷகனின் முதலாம் சந்திப்பு
  • 1.3.திட்டிவாசல் பயணம்
  • 1.4.வன சம்பாஷணை
  • 1.5.நம்பிக்கையிழவின் அவதி
  • 1.6.லோகஞானி சந்திப்பு
  • 1.7.சுவிசேஷகனின் இரண்டாம் சந்திப்பு
  • 1.8.திட்டிவாசல் கோட்டை சேருதல்
  • 1.9.வியாக்கியானி வீடு சேருதல்
  • 1.10.பிரயாணியின் சிலுவைத் தரிசனை
  • 1.11.பிரயாணி கஷ்டகிரி சேருதல்
  • 1.12.பிரயாணி சுருளை இழத்தல்
  • 1.13.பிரயாணி சிங்கார மாளிகை சேருதல்
  • 1.14.அப்பொல்லியோன் சந்திப்பு (தாழ்மைப் பள்ளம்)
  • 1.15.பிரயாணி மரண நிழலின் பள்ளத்தாக்கைக் கடத்தல்
  • 1.16.பாப்பு ராஷதன் சந்திப்பு
  • 1.17.கிறிஸ்தியான் உண்மையோடு கூடுதல்
  • 1.18.வாயாடி வந்து கூடுதல்
  • 1.19.சுவிசேஷகரின் மூன்றாம் சந்திப்பு
  • 1.20.பிரயாணிகள் மாயாபுரி சேருதல்
  • 1.21.பிரயாணிகள் உபாயியை சந்தித்தல்
  • 1.22.உபாயியின் தோழர் சந்திப்பு
  • 1.23.பிரயாணிகள் திரவியகிரி சேருதல்
  • 1.24.பிரயாணிகள் தேவ நதி சேருதல்
  • 1.25.பிரயாணிகள் பக்கத்து வழி மைதானம் திரும்புதல்
  • 1.26.அகோர பயங்கர ராட்சதன் பிரயாணிகளைப் பிடித்தல்
  • 1.27.பிரயாணிகள் ஆனந்த மலை சேருதல்
  • 1.28.பிரயாணிகள் அறிவீனனைச் சந்தித்தல்
  • 1.29.பிரயாணிகள் முகஸ்துதியை சந்தித்தல்
  • 1.30.நாஸ்திக சாஸ்திரி சந்தித்தல்
  • 1.31.மயக்க பூமியில் பிரயாணிகள் நடத்தல்
  • 1.32.அறிவீனனை மறுபடியும் சந்தித்தல்
  • 1.33.சொற்பகாலம் என்பவரை பற்றிய சம்பாஷணை
  • 1.34.பிரயாணிகள் வாழ்க்கைநாடு சேருதல்
  • 1.35.பிரயாணிகள் நதியைக் கடத்தல்
  • 1.36.பிரயாணிகள் மோட்சம் ஏறுதல்
  • 1.37.பிரயாணிகள் மோட்சம் சேருதல்
  • 1.38.அறிவீனனுடைய முடிவு
  • 2.கிறிஸ்தீனாளின் மோட்ச பிரயாணம்
  • 2.1.கூரியபுத்தி பிரசன்னம்
  • 2.2.கிறிஸ்தீனாளின் பிரயாண ஏவுதல்கள்
  • 2.3.அந்தரங்கன் அவளைச் சந்தித்தது
  • 2.4.கிறிஸ்தீனாளின் பிரயாண ஆயத்தம்
  • 2.5.கிறிஸ்தீனாளின் மோட்ச பயணம்
  • 2.6.பிரயாணிகள் நம்பிக்கையிழவு உளை சேர்ந்தது
  • 2.7.அவர்கள் திட்டிவாசல் சேர்ந்தது
  • 2.8.இடுக்கமான வழிப் பயணம்
  • 2.9.பிரயாணிகள் வியாக்கியானி வீடு சேர்தல்
  • 2.10.அலங்கார மாளிகைப் பிரயாணம்
  • 2.11.பிரயாணிகள் கஷ்டகிரி வந்து சேர்ந்தது
  • 2.12.அலங்கார மாளிகை வந்து சேர்ந்தது
  • 2.13.அலங்கார மாளிகையை விட்டு புறப்படுதல்
  • 2.14.தாழ்மை என்னும் பள்ளத்தாக்கு
  • 2.15.மரண நிழலின் பள்ளத்தாக்கு
  • 2.16.சங்கார ராட்சதனை சந்தித்தல்
  • 2.17.யதார்த்தனுடன் கூடுதல்
  • 2.18.அச்சநெஞ்சனைப் பற்றிய சம்பாஷணை
  • 2.19.தன்னிஷ்டத்தைப் பற்றிய சம்பாஷணை
  • 2.20.பரோபகார காயுவின் சத்திரம் சேருதல்
  • 2.21.பிரயாணிகள் பரோபகார காயு மடம் விட்டது
  • 2.22.பூர்வ பிரயாணிகளைப் பற்றிய சம்பாஷணை
  • 2.23.பிரயாணிகள் மாயாபுரி மினாசோன் வீடு வந்து சேர்ந்தது
  • 2.24.வலுசர்ப்பத் தொல்லை
  • 2.25.பிரயாணிகள் மாயாபுரியை விட்டது
  • 2.26.பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது
  • 2.27.அகோர பயங்கர ராட்சதனை சங்காரம் செய்தல்
  • 2.28.பிரயாணிகள் ஆனந்தமலை சேருதல்
  • 2.29.சத்திய வீரதீரனை சந்தித்தல்
  • 2.30.பிரயாணிகள் மயக்க பூமி சேர்தல்
  • 2.31.பிரயாணிகள் வாழ்க்கை நாடு சேருதல்
  • 2.32.கிறிஸ்தீனாளின் மரணம்
  • 2.33.மற்ற பிரயாணிகளின் முடிவு
  • 3.ஜாண் பன்னியன்
  • 3.1.மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து பாதுகாத்த தேவ கரம்
  • 3.2.தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்
  • 3.3.ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது
  • 3.4.ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்
  • 3.5.ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை
  • 3.6.தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்
  • 3.7.”என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்”
  • 3.8.ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு




Copyright © www.devaekkalam.com. All Rights Reserved.