default-logo
உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு
(ஆமோஸ் 4:12)
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு

1.24.பிரயாணிகள் தேவ நதி சேருதல்


பிரயாணிகள் தேவ நதி சேருதல்


அப்புறம் நான் என் சொப்பனத்தில் கண்டது என்னவென்றால் பிரயாணிகள் இருவரும் தங்கள் வழியே நடந்து ஒரு இன்பமான ஆற்றண்டை வந்து சேர்ந்தார்கள்.

அந்த ஆறு தாவீது அரசனால் “தேவ நதி” என்றும் யோவான் அப்போஸ்தலனால் “ஜீவ தண்ணீருள்ள நதி”1 என்றும் அழைக்கப் பட்டிருக்கிறது. (சங் 65 : 9 வெளி 22 : 1 எசே 47 : 1 – 9) பிரயாணிகளின் பாதை அந்த ஆற்றங்கரை மேலே போயிற்று. கிறிஸ்தியானும் அவன் தோழனும் இங்கே நடக்கையில் அவர்களுக்கு உண்டான சந்தோசங்களுக்கு ஒரு அளவில்லை. அவர்கள் அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தார்கள். ஆதலால் இளைத்த அவர்கள் ஆவி தழைத்துப் பலப்பட்டது. அதுவும் அல்லாமல் அந்த ஆற்றின் இரு கரைகளிலும் பலவித கனிகளைக் கொடுக்கும் அநேக விருட்சங்கள் பச்சை பசேரென்று இருந்தன. அவைகளின் இலைகளை அவர்கள் பிடுங்கி தின்று பல நோய்களையும், வழிப்பிரயாணத்தால் உண்டாகும் இரத்தக் கொதிப்புகளையும் தீர்த்துக் கொண்டார்கள். அதுவும் அல்லாமல் நதியின் இரு பக்கங் களிலும் லீலியா புஷ்பங்கள் நிறைந்த புல் மைதானங்களும் இருந்தன. அது வருஷம் முழுவதும் பசுமையாகவே காணப்பட்டது. இங்கே படுத்துக்கொள்ள வசதியாய் இருந்தபடியால் அவர்கள் இந்த மைதானத்தில் படுத்துத் தூங்கினார்கள். (சங் 23 : 2 ஏசா 14 : 10) கண் விழித்து எழுந்தவுடனே அந்த மரத்துக் கனிகளை பறித்துத் தின்று ஆற்றின் தண்ணீரைக் குடித்து மறுபடியும் படுத்துத் தூங்குவார்கள். அவர்கள் அநேக இரவையும் அநேக பகலையும் இப்படியே கழித்தார்கள். அந்த இடத்தில் இருக்கும்போது அவர்கள் ஆனந்த பரவசங் கொண்டு:-

1. மா இன்ப நதிதான்
ஓடுதே பார்!
பளிங்கொளி போலத்தான்
தோன்றுதே பார்
ராஜ பாதையாக
நடப்பவருக்காக
மா இன்ப நதிதான்
ஓடுதே பார்!

2 மைதானம் பச்சென்று
காணுதே பார்!
பூமணம் கம்மென்று
வீசுதே பார்!
ஆற்றோரத்து மரக்
கனி இலைகள் மகா
ஆரோக்கியம் தரும்
அவிழ்தமாம்

3 அவ்வின்பம் கண்டவன்
இப்பூமியை
வாங்கத் தனக்குள்ள
எல்லாம் விற்பான்
ராஜபாதையாக
நடப்பவருக்காக
மா இன்ப நதிதான்
ஓடுதே பார்!

என்று பாடினார்கள். இம்மட்டோடு அவர்கள் பயணம் முடிய வில்லை. அவர்கள் மறுபடியும் பிரயாணம் பண்ண மனங்கொண்ட போது புசித்துக் குடித்துப் புறப்பட்டார்கள்.


1. ஜீவ தண்ணீருள்ள நதி: இது ஞான ஜீவனின் ஊற்றாகிய பரிசுத்த ஆவியைக் குறிக்கலாம். அதில் பானம் பண்ணினார்கள் என்பது, பரிசுத்தமான அன்பினாலும், சந்தோசத்தினாலும் நிறைந்திருப்பதையும், இந்த உலகத்தின் கவலைகளையும், வருத்தங்களையும் தாண்டியிருப்பதையும் நமக்கு உணர்த்துகிறது.

மோட்ச பிரயாணம்

  • மோட்ச பிரயாணம்
  • தலையங்கச் செய்தி
  • முகவுரை: சாமுவேல் பவுல் ஐயர்
  • 1.1.பிரயாண ஆவல்
  • 1.2.சுவிசேஷகனின் முதலாம் சந்திப்பு
  • 1.3.திட்டிவாசல் பயணம்
  • 1.4.வன சம்பாஷணை
  • 1.5.நம்பிக்கையிழவின் அவதி
  • 1.6.லோகஞானி சந்திப்பு
  • 1.7.சுவிசேஷகனின் இரண்டாம் சந்திப்பு
  • 1.8.திட்டிவாசல் கோட்டை சேருதல்
  • 1.9.வியாக்கியானி வீடு சேருதல்
  • 1.10.பிரயாணியின் சிலுவைத் தரிசனை
  • 1.11.பிரயாணி கஷ்டகிரி சேருதல்
  • 1.12.பிரயாணி சுருளை இழத்தல்
  • 1.13.பிரயாணி சிங்கார மாளிகை சேருதல்
  • 1.14.அப்பொல்லியோன் சந்திப்பு (தாழ்மைப் பள்ளம்)
  • 1.15.பிரயாணி மரண நிழலின் பள்ளத்தாக்கைக் கடத்தல்
  • 1.16.பாப்பு ராஷதன் சந்திப்பு
  • 1.17.கிறிஸ்தியான் உண்மையோடு கூடுதல்
  • 1.18.வாயாடி வந்து கூடுதல்
  • 1.19.சுவிசேஷகரின் மூன்றாம் சந்திப்பு
  • 1.20.பிரயாணிகள் மாயாபுரி சேருதல்
  • 1.21.பிரயாணிகள் உபாயியை சந்தித்தல்
  • 1.22.உபாயியின் தோழர் சந்திப்பு
  • 1.23.பிரயாணிகள் திரவியகிரி சேருதல்
  • 1.24.பிரயாணிகள் தேவ நதி சேருதல்
  • 1.25.பிரயாணிகள் பக்கத்து வழி மைதானம் திரும்புதல்
  • 1.26.அகோர பயங்கர ராட்சதன் பிரயாணிகளைப் பிடித்தல்
  • 1.27.பிரயாணிகள் ஆனந்த மலை சேருதல்
  • 1.28.பிரயாணிகள் அறிவீனனைச் சந்தித்தல்
  • 1.29.பிரயாணிகள் முகஸ்துதியை சந்தித்தல்
  • 1.30.நாஸ்திக சாஸ்திரி சந்தித்தல்
  • 1.31.மயக்க பூமியில் பிரயாணிகள் நடத்தல்
  • 1.32.அறிவீனனை மறுபடியும் சந்தித்தல்
  • 1.33.சொற்பகாலம் என்பவரை பற்றிய சம்பாஷணை
  • 1.34.பிரயாணிகள் வாழ்க்கைநாடு சேருதல்
  • 1.35.பிரயாணிகள் நதியைக் கடத்தல்
  • 1.36.பிரயாணிகள் மோட்சம் ஏறுதல்
  • 1.37.பிரயாணிகள் மோட்சம் சேருதல்
  • 1.38.அறிவீனனுடைய முடிவு
  • 2.கிறிஸ்தீனாளின் மோட்ச பிரயாணம்
  • 2.1.கூரியபுத்தி பிரசன்னம்
  • 2.2.கிறிஸ்தீனாளின் பிரயாண ஏவுதல்கள்
  • 2.3.அந்தரங்கன் அவளைச் சந்தித்தது
  • 2.4.கிறிஸ்தீனாளின் பிரயாண ஆயத்தம்
  • 2.5.கிறிஸ்தீனாளின் மோட்ச பயணம்
  • 2.6.பிரயாணிகள் நம்பிக்கையிழவு உளை சேர்ந்தது
  • 2.7.அவர்கள் திட்டிவாசல் சேர்ந்தது
  • 2.8.இடுக்கமான வழிப் பயணம்
  • 2.9.பிரயாணிகள் வியாக்கியானி வீடு சேர்தல்
  • 2.10.அலங்கார மாளிகைப் பிரயாணம்
  • 2.11.பிரயாணிகள் கஷ்டகிரி வந்து சேர்ந்தது
  • 2.12.அலங்கார மாளிகை வந்து சேர்ந்தது
  • 2.13.அலங்கார மாளிகையை விட்டு புறப்படுதல்
  • 2.14.தாழ்மை என்னும் பள்ளத்தாக்கு
  • 2.15.மரண நிழலின் பள்ளத்தாக்கு
  • 2.16.சங்கார ராட்சதனை சந்தித்தல்
  • 2.17.யதார்த்தனுடன் கூடுதல்
  • 2.18.அச்சநெஞ்சனைப் பற்றிய சம்பாஷணை
  • 2.19.தன்னிஷ்டத்தைப் பற்றிய சம்பாஷணை
  • 2.20.பரோபகார காயுவின் சத்திரம் சேருதல்
  • 2.21.பிரயாணிகள் பரோபகார காயு மடம் விட்டது
  • 2.22.பூர்வ பிரயாணிகளைப் பற்றிய சம்பாஷணை
  • 2.23.பிரயாணிகள் மாயாபுரி மினாசோன் வீடு வந்து சேர்ந்தது
  • 2.24.வலுசர்ப்பத் தொல்லை
  • 2.25.பிரயாணிகள் மாயாபுரியை விட்டது
  • 2.26.பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது
  • 2.27.அகோர பயங்கர ராட்சதனை சங்காரம் செய்தல்
  • 2.28.பிரயாணிகள் ஆனந்தமலை சேருதல்
  • 2.29.சத்திய வீரதீரனை சந்தித்தல்
  • 2.30.பிரயாணிகள் மயக்க பூமி சேர்தல்
  • 2.31.பிரயாணிகள் வாழ்க்கை நாடு சேருதல்
  • 2.32.கிறிஸ்தீனாளின் மரணம்
  • 2.33.மற்ற பிரயாணிகளின் முடிவு
  • 3.ஜாண் பன்னியன்
  • 3.1.மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து பாதுகாத்த தேவ கரம்
  • 3.2.தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்
  • 3.3.ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது
  • 3.4.ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்
  • 3.5.ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை
  • 3.6.தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்
  • 3.7.”என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்”
  • 3.8.ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு




Copyright © www.devaekkalam.com. All Rights Reserved.