நாங்கள் டார்ச்சுலா நோக்கி வந்து கொண்டிருந்த மாற்று
வழித்தடத்தில் எங்களுக்கு எதிர்ப்பட்ட கிராமங்களில் எல்லாம் எங்கள் வாகனங்களை
நிறுத்தி நிறுத்தி தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களை ஜெபத்துடன்
விநியோகித்துக்கொண்டே சென்றோம். எங்கள் பாதையில் ஒரு வறட்சியான ஒரு நதியில்
மக்கள் தங்கள் லாரிகளை நிறுத்திவைத்துவிட்டு நதியில் கிடந்த கற்கள் மற்றும்
மண்ணை சேர்த்துக் குவித்துக்கொண்டிருந்தனர். நமது தேவ ஊழியர்கள்
வாகனங்களிலிருந்து இறங்கிச் சென்று அந்த நேரம் அந்த நதியில் அந்த வேலைகளில்
ஈடுபட்டிருந்த மக்கள் யாவருக்கும் தேவனுடைய பிரசுரங்களை வழங்கினர்.
அந்தக்காட்சியை நீங்கள் படத்தில் காணலாம்.

கிவிதா என்ற கிராமத்தில் ஒரு ஆரம்ப
பள்ளி இருந்தது. அதில் ஒரு ஆசிரியரும் 9 பிள்ளைகளும் இருந்தனர். தலைமை ஆசிரியர்
அத்ரி பவன் என்பவருக்கு ஒரு வேதாகமமும் இதர பிரதிகளும் கொடுக்கப்பட்டன.
மாணாக்கருக்கு இந்தி லூக்கா சுவிசேஷத்துடன் மற்ற பிரதிகள் கொடுக்கப்பட்டன. நமது
வாகனம் ரஸ்தாவில் நிறுத்தப்பட்டிருப்பதையும், கிராமத்திற்கு கீழாக பள்ளி
தெரிவதையும் படத்தில் நீங்கள் காணலாம்.

அந்த கிராமத்தில் நாங்கள் கொடுத்த
தேவனுடைய பிரதிகளை கருத்தோடு ரஸ்தாவில் படித்துக் கொண்டு வரும் ஒரு மனிதனை
நீங்கள் பார்க்கலாம்.

நாங்கள் வந்த வழித்தடத்தில் தங்கள் தோட்டத்தில்
வேலைசெய்து கொண்டிருந்த இரு பெண்களுக்கு நமது தேவ ஊழியர்கள் சாந்திமார்க்கம்
என்ற இந்தி மொழி லூக்கா சுவிசேஷங்களையும், இதர பிரதிகளையும் கொடுத்தனர்.
மரத்தின் நிழலில் அமர்ந்து அவர்கள் அவற்றை ஆவலாக வாசிப்பதை காணலாம்.

எங்களுடைய
பாதையில் காணப்பட்ட ஒரு கிராமத்தில் தேவனுடைய பிரசுரங்களை கொடுப்பதற்காக
பாஸ்டர் சகோதரன் ஓபேத் அவர்கள் தனிமையில் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

தனக்குக் கிடைத்த லூக்கா சுவிசேஷத்தையும் அத்துடன் வைக்கப்பட்டிருக்கும்
பிரதிகளையும் கவனமாக வாசிக்கும் ஒரு முதியவரை நாம் பார்க்கின்றோம்.

ஒரு
கிராமத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தேவனுடைய பிரசுரங்களை தங்கள் கரங்களில்
வைத்துப் படித்துக்கொண்டிருக்கும் ஓரு சிறு கூட்டம் மக்களை நாம் காண்கின்றோம்.

இப்படியாக நாங்கள் எங்கள் பித்தோர்கார்ட் பட்டணத்தித்திலிருந்து டார்ச்சுலா
வரையிலான மாற்று வழித்தடத்தில் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்தடன் கொடுத்துக்
கொண்டே மாலைமயங்கும் நேரத்தில் டார்ச்சுலா பட்டணம் வந்து சேர்ந்தோம்.
வழக்கம்போல நாங்கள் அங்கிருந்த அரசாங்க ஓய்வு விடுதியில் இரண்டு அறைகள்
வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம். பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களும்,
வாகன ஓட்டுனர்கள் இருவர் மற்றும் தேவ ஊழியர்கள் ஐந்து பேர் பொதுவான அறை
ஒன்றிலும்
(Dormitory) நாங்கள் இருவர் மேல் மாடியில் ஒரு அறையிலும் இருந்தோம்.
டார்ச்சுலா பட்டணத்தைவிட்டு அரசாங்க ஓய்வு விடுதி முற்றும் தனியாக காளி நதி
ஓரமாக அமைந்திருப்பதால் எந்த ஒரு ஜன சந்தடி இன்றி மக்கள் ஆரவாரமின்றி தனித்து
இருக்கின்றது. அதின் காரணமாக எந்த ஒரு இடையூறும் இல்லாமல் ஆண்டவருடைய
பாதங்களில் ஜெபத்தில் தரித்திருக்க இந்த இடம் ஏற்றதாக உள்ளது. எத்தனை மணி
நேரங்கள் வேண்டுமானாலும் அன்பரின் பாதங்களில் ஜெபத்தில் அமர்ந்திருக்கலாம்.
அப்படியே ஜெபத்தில் தேவ பெலத்தால் நாங்கள் தரித்திருந்தோம். கர்த்தருக்கே
மகிமை.
நாங்கள் இந்த விடுதியில் தங்கியிருந்து கொண்டு எங்கள் ஆகாரங்களை பக்கத்திலுள்ள
ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம். ஆகாரத்திற்குத் தேவையான பொருட்களையும், புதிய
காய்கறிகளையும் நாங்கள் பஜாரில் வாங்கி ஹோட்டல்காரருக்கு கொடுத்துவிட்டு நல்ல
சுவையான ஆகாரத்தை புசிக்க கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார். காலையில் பொதுவாக
எங்கள் ஆகாரம் பூரியாகவே இருந்தது. அதற்குத் தேவையான பெரிய வெள்ளை கொண்டை
கடலையை நாங்களே வாங்கிக் கொடுத்துவிட்டோம். தனது குடும்பத்தினருக்கு
பொறுப்போடும், அன்போடும் ஆகாரம் சமைத்துக் கொடுப்பதுபோல பரதேசிகளாகிய
எங்களுக்கும் அந்த மக்கள் உணவளித்தார்கள். நாங்கள் கர்த்தருடைய ஊழியத்தின்
பாதையில் வெளியிடங்களுக்குச் சென்றுவிட்டு நண்பகலிலோ அல்லது இரவிலோ எந்த ஒரு
பிந்திய நேரத்தில் வந்து சேர்ந்தாலும், பஜாரில் உள்ள மற்ற கடைகள் எல்லாம்
மூடப்பட்டுவிட்டாலும் எங்களுக்காக தனது ஹோட்டலைத் திறந்து வைத்து அந்த மக்கள்
அன்போடு எங்களுக்கு உணவளித்தார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.
|