(வேத வசனங்களை மனப்பாடம் செய்யும் இரகசியம் இது ஒன்றேதான்) எனது ஆரம்ப கால கிறிஸ்தவ வாழ்வில் தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த எனது அறிவு மிகவும் குறைவானதாகும். இரண்டாம் உலகப்போரின் போது நானும் என்னைப்போன்ற மற்றொரு டாக்டரும் ஒன்றாக ஒரு கப்பல் யாத்திரையில் இருந்தோம். அந்த டாக்டர் என்னைப் பார்த்து வேதாகமத்தைக் குறித்து தனக்கு ஏதாவது சொல்லும்படியாக என்னைக் கேட்டார்.
வேதாகமத்தைக் குறித்த அறிவு அப்பொழுது எனக்கு ஒன்றுமில்லையாதலால் நான் அவருக்கு எதையும் சொல்லக் கூடாதவனானேன். அது எனக்கு மிகவும் வேதனையான ஒரு அனுபவமாகவே அப்பொழுது இருந்தது. நான் எனது பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரி படிப்பு இன்னும் கடினமான மருத்துவப் படிப்பைக்கூட படித்து முடித்திருந்தேன். அந்தப் படிப்புகளின்போது நான் ஆயிரக்கணக்கான தத்தவ விளக்கங்களையும், விதிகளையும், சமன்பாடுகளையும், தண்ணீர்பட்ட பாடமாக மனப்பாடமாகப் படித்திருந்தேன். ஆனால், தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளைக் குறித்த அறிவு எனக்கு பூஜ்யமாகவிருந்தது. சொல்லப்போனால் தேவனுடைய வார்த்தையோடு நான் விளையாடிக்கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் ஆண்டவர் என்னைப் பார்த்து தேவ வசனங்களை மனப்பாடம் செய்யும்படியாகக் கூறினார். எனக்கும் (டாக்டர் ரால்ப் பைரன்) ஆண்டவருக்கும் இடையிலான சம்பாஷணை இவ்விதமாக அமைந்தது:-
பைரன்:- "ஐயா, உம்முடைய வேத வசனங்களை என்னால் மனப்பாடம் செய்ய இயலாது.
ஆண்டவர்:- "உன்னால் கூடும்"
பைரன்:- "தகப்பனே, உம்முடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் என்னில் இல்லை"
ஆண்டவர்:- "உனக்கு அந்த ஆற்றல் நிச்சயமாக உண்டு"
பைரன்:- "அப்பா, நான் விரைவில் மறந்து போகக்கூடியவன்"
ஆண்டவர்:- "நீ படித்தவற்றை திரும்பத் திரும்ப உன் நினைவுக்கு கொண்டு வந்து கொண்டிரு. அப்பொழுது நீ சிறப்பாக தேவனுடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்து கொள்ளுவாய்"
எங்கள் இருவருடைய வாக்குவாதத்தின் இறுதியில் ஆண்டவரே வெற்றி பெற்றார். அவருடைய ஆலோசனையின்படி தேவ வசனங்களை ஒழுங்கும் கிரமமுமாகப் படித்து, படித்த பகுதிகளை அடிக்கடி திரும்பத் திரும்ப எனது நினைவுக்குக் கொண்டு வந்து எனது நிலையை நான் நன்கு உறுதிப்படுத்திக் கொண்டேன். இப்பொழுது நான் தேவனுடைய அநேக வசனங்களை எனது இருதயத்தில் பொக்கிஷ வைப்பாக வைத்துக் கொள்ள முடிந்தது. கர்த்தருக்கே மகிமை.
Taken from the book:- (God's Word Unique, Magnetic, Eternal)
|