default-logo
உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு
(ஆமோஸ் 4:12)
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு

3.3.ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது


ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது


ஜாண் பன்னியன் ஒரு தேவ பக்தியுள்ள ஏழை மனிதரின் மகளை திருமணம் செய்தார். அந்தப் பெண்மணி தன்னுடன் சீதனமாகக் கொண்டு வந்த பொருட்கள் ஒரு சாப்பிடும் தட்டும் ஒரு கரண்டியுமாகும். அத்துடன் அந்தப் பக்தியான பெண் இரண்டு அருமையான கிறிஸ்தவ ஆவிக்குரிய புத்தகங்களையும் கொண்டு வந்திருந்தார்கள். “பக்தி வாழ்வை அப்பியாசித்தல்” “மனிதனை பரலோகத்துக்கு அழைத்துச் செல்லும் பாதை” என்ற அந்த இரண்டு புத்தகங்களும் பாவத்தில் ஜீவித்த பன்னியனை பக்தி வாழ்வுக்கு அடி எடுத்து வைக்க பெரிதும் கை கொடுத்து உதவின. எனினும், இந்தப் புத்தகங்கள் மாத்திரம்தான் அவரை இரட்சிப்புக்குள் வழிநடத்தினது என்று நாம் சொல்ல இயலாது.


பரிசுத்த குருவானவர் ஜாண் ஹிஃபோர்ட்


ஜாண் பன்னியனை ஆண்டவருடைய இரட்சிப்பின் நிச்சயத்துக்குள்ளும், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்துக் குள்ளும் வழிநடத்தியவர் பெட்ஃபோர்ட் நகரத்துப் பரிசுத்த குருவானவர் ஜாண் ஹிஃபோர்ட் என்பவராவார். ஜாண் ஹிஃபோர்ட் தனது வாழ்க்கையை ஒரு போர் வீரனாக ஆரம்பித்தார். வாழ்வில் அவர் துஷ்டனும், துன்மார்க்கனும், சூதாட்டக்காரனும், ஊறிப்போன குடிகாரனுமாக இருந்தார். ஊதாரித்தனமாக வாழ்ந்த அவருடைய வாயிலிருந்து கடல் மடை திறந்தது போல ஆணையிடுதல்கள் அவலட்சணமான தூஷண வார்த்தைகளோடு புறப்பட்டு வரும் என்று அவரை அறிந்தவரான ராபர்ட் சவுதே என்பவர் கூறுகின்றார். ஜாண் ஹிஃபோர்ட் தான் வாழ்ந்த பெட்ஃபோர்ட் பட்டணத்திலுள்ள பியூரிட்டான்கள் (Puritans) என்று அழைக்கப்பட்ட பிராட்ட ஸ்டண்ட் பரிசுத்த பக்தர்களை இம்சிப்பதில் தீவிரமாக ஈடுபட் டிருந்தார். அவர்களின் தலைவனான அன்றோணி ஹாரிங்டன் என்பவரை கொலை செய்ய அவர் வெகுவாக முயற்சித்தார்.. தெய்வாதீனமாக அந்த பக்தன் கர்த்தரால் காக்கப்பட்டார்.

இங்கிலாந்தில் உள் நாட்டுப் போர் நடந்த சமயம் ஜாண் ஹிஃபோர்ட் அரசருடைய படையில் சேர்ந்திருந்தார். மன்னருக் கெதிரான படையின் தளபதி ஒருவன் ஜாணை எதிர்பாராதவிதமாக கைது செய்து அவருடன் சேர்ந்த சிலரையும் அடுத்த நாள் தூக்கிலிட்டு கொல்ல பாதுகாப்பான ஒரு இடத்தில் கொண்டு வைத்திருந்தான். அதைக் கேள்விப்பட்ட ஜாண் ஹிஃபோர்டின் உடன் பிறந்த சகோதரி தனது உயிரையும் துச்சமாக மதித்து அவர் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நள்ளிரவு நேரம் சென்றார். தனது சகோதரனை பாதுகாத்துக் கொண்டிருந்த காவலர்கள் நன்கு மதுபானம் குடித்து மயங்கிக்கிடந்த அந்த நேரத்தில் அவரை ஓசைப்படாமல் அழைத்து வந்துவிட்டார். அடுத்து வந்த மூன்று நாட்கள் ஜாண் ஹிஃபோர்ட் தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள ஆழமான ஒரு நாற்ற சாக்கடைத் தண்ணீருக்குள் மூழ்கி இருக்க வேண்டியதானது. ஆண்டவரின் பாதுகாவலின் கரங்கள் நிச்சயமாக அவரோடு இருந்தபடியால் தான் சந்திக்க வேண்டிய முழு நிச்சயமான மரண தண்டனையிலிருந்து ஆச்சரியம் அற்புதமாக தப்பிக் கொண்டார்.

அதின் பின்னர் ஜாண் ஹிஃபோர்ட் என்பவர் ராபர்ட் போல்ற்றன் என்ற பரிசுத்தவான் எழுதிய ஒரு பக்தியுள்ள புத்தகத்தை வாசித்து ஆழமான மனந்திரும்புதலுக்குள் கடந்து வந்தார். அதின் பின்னர் அநேகரை நீதிக்குட்படுத்தும் பரிசுத்த குருவானவராக பெட்ஃபோர்ட் பட்டணத்து தேவாலயத்தில் பணி புரிந்தார். இரட்சிப்பைக் கண்டடையும் விஷயத்தில் நிலை தடுமாறிக் கொண்டிருந்த ஜாண் பன்னியனை சில தேவ பிள்ளைகள் தங்கள் குருவானவராகிய ஜாண் ஹிஃபோர்ட்டிடம் அழைத்து வந்து இரட்சிப்பின் வழியையும், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்தையும் கண்டு கொள்ள வகை செய்தனர்.

கர்த்தருடைய இரட்சிப்பைக் கண்டடைந்த ஜாண் பன்னியனை தேவன் தமது வல்லமையான பாத்திரமாக ஆரம்பம் முதலே பயன்படுத்த தொடங்கினார். “ஜாண் பன்னியன் நல்ல உயரமான மனிதர். அவரது தலை முடி சுருள் சுருளாக செந்நிறமாகவும், அவரது கண்கள் பளிச்சிட்டு மின்னுவதாகவும் இருக்கும். அவரது நெற்றி உயரமானதாகவும், அவரது முகப்பார்வை உறுதியானதும், கோபம் கொண்டோனைப்போல காணப்படுவதாயினும் அவர் பேசத் தொடங்கிவிட்டால் அவரில் அன்பும், தாழ்மையும், எளிமையும் பாய்ந்தோட ஆரம்பித்துவிடும். பிரசங்க பீடத்தில் நின்று பன்னியன் பிரசங்கிக்கும்போது அவரது தேவச்செய்தியும், பாவனைகளும் மிகுந்த பக்தி வினயமாக இருக்கும். “தேவனுக்குப் பயப்படாமல் தங்கள் பாவங்களில் வாழ்வோருக்கு அவரது தேவச் செய்தி பயங்கரமான மின்னல் தாக்குதல் போல அத்தனை எச்சரிக்கையாக இருக்கும்” என்று அவரது நண்பர்களில் ஒருவர் கூறினார்.

மோட்ச பிரயாணம்

  • மோட்ச பிரயாணம்
  • தலையங்கச் செய்தி
  • முகவுரை: சாமுவேல் பவுல் ஐயர்
  • 1.1.பிரயாண ஆவல்
  • 1.2.சுவிசேஷகனின் முதலாம் சந்திப்பு
  • 1.3.திட்டிவாசல் பயணம்
  • 1.4.வன சம்பாஷணை
  • 1.5.நம்பிக்கையிழவின் அவதி
  • 1.6.லோகஞானி சந்திப்பு
  • 1.7.சுவிசேஷகனின் இரண்டாம் சந்திப்பு
  • 1.8.திட்டிவாசல் கோட்டை சேருதல்
  • 1.9.வியாக்கியானி வீடு சேருதல்
  • 1.10.பிரயாணியின் சிலுவைத் தரிசனை
  • 1.11.பிரயாணி கஷ்டகிரி சேருதல்
  • 1.12.பிரயாணி சுருளை இழத்தல்
  • 1.13.பிரயாணி சிங்கார மாளிகை சேருதல்
  • 1.14.அப்பொல்லியோன் சந்திப்பு (தாழ்மைப் பள்ளம்)
  • 1.15.பிரயாணி மரண நிழலின் பள்ளத்தாக்கைக் கடத்தல்
  • 1.16.பாப்பு ராஷதன் சந்திப்பு
  • 1.17.கிறிஸ்தியான் உண்மையோடு கூடுதல்
  • 1.18.வாயாடி வந்து கூடுதல்
  • 1.19.சுவிசேஷகரின் மூன்றாம் சந்திப்பு
  • 1.20.பிரயாணிகள் மாயாபுரி சேருதல்
  • 1.21.பிரயாணிகள் உபாயியை சந்தித்தல்
  • 1.22.உபாயியின் தோழர் சந்திப்பு
  • 1.23.பிரயாணிகள் திரவியகிரி சேருதல்
  • 1.24.பிரயாணிகள் தேவ நதி சேருதல்
  • 1.25.பிரயாணிகள் பக்கத்து வழி மைதானம் திரும்புதல்
  • 1.26.அகோர பயங்கர ராட்சதன் பிரயாணிகளைப் பிடித்தல்
  • 1.27.பிரயாணிகள் ஆனந்த மலை சேருதல்
  • 1.28.பிரயாணிகள் அறிவீனனைச் சந்தித்தல்
  • 1.29.பிரயாணிகள் முகஸ்துதியை சந்தித்தல்
  • 1.30.நாஸ்திக சாஸ்திரி சந்தித்தல்
  • 1.31.மயக்க பூமியில் பிரயாணிகள் நடத்தல்
  • 1.32.அறிவீனனை மறுபடியும் சந்தித்தல்
  • 1.33.சொற்பகாலம் என்பவரை பற்றிய சம்பாஷணை
  • 1.34.பிரயாணிகள் வாழ்க்கைநாடு சேருதல்
  • 1.35.பிரயாணிகள் நதியைக் கடத்தல்
  • 1.36.பிரயாணிகள் மோட்சம் ஏறுதல்
  • 1.37.பிரயாணிகள் மோட்சம் சேருதல்
  • 1.38.அறிவீனனுடைய முடிவு
  • 2.கிறிஸ்தீனாளின் மோட்ச பிரயாணம்
  • 2.1.கூரியபுத்தி பிரசன்னம்
  • 2.2.கிறிஸ்தீனாளின் பிரயாண ஏவுதல்கள்
  • 2.3.அந்தரங்கன் அவளைச் சந்தித்தது
  • 2.4.கிறிஸ்தீனாளின் பிரயாண ஆயத்தம்
  • 2.5.கிறிஸ்தீனாளின் மோட்ச பயணம்
  • 2.6.பிரயாணிகள் நம்பிக்கையிழவு உளை சேர்ந்தது
  • 2.7.அவர்கள் திட்டிவாசல் சேர்ந்தது
  • 2.8.இடுக்கமான வழிப் பயணம்
  • 2.9.பிரயாணிகள் வியாக்கியானி வீடு சேர்தல்
  • 2.10.அலங்கார மாளிகைப் பிரயாணம்
  • 2.11.பிரயாணிகள் கஷ்டகிரி வந்து சேர்ந்தது
  • 2.12.அலங்கார மாளிகை வந்து சேர்ந்தது
  • 2.13.அலங்கார மாளிகையை விட்டு புறப்படுதல்
  • 2.14.தாழ்மை என்னும் பள்ளத்தாக்கு
  • 2.15.மரண நிழலின் பள்ளத்தாக்கு
  • 2.16.சங்கார ராட்சதனை சந்தித்தல்
  • 2.17.யதார்த்தனுடன் கூடுதல்
  • 2.18.அச்சநெஞ்சனைப் பற்றிய சம்பாஷணை
  • 2.19.தன்னிஷ்டத்தைப் பற்றிய சம்பாஷணை
  • 2.20.பரோபகார காயுவின் சத்திரம் சேருதல்
  • 2.21.பிரயாணிகள் பரோபகார காயு மடம் விட்டது
  • 2.22.பூர்வ பிரயாணிகளைப் பற்றிய சம்பாஷணை
  • 2.23.பிரயாணிகள் மாயாபுரி மினாசோன் வீடு வந்து சேர்ந்தது
  • 2.24.வலுசர்ப்பத் தொல்லை
  • 2.25.பிரயாணிகள் மாயாபுரியை விட்டது
  • 2.26.பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது
  • 2.27.அகோர பயங்கர ராட்சதனை சங்காரம் செய்தல்
  • 2.28.பிரயாணிகள் ஆனந்தமலை சேருதல்
  • 2.29.சத்திய வீரதீரனை சந்தித்தல்
  • 2.30.பிரயாணிகள் மயக்க பூமி சேர்தல்
  • 2.31.பிரயாணிகள் வாழ்க்கை நாடு சேருதல்
  • 2.32.கிறிஸ்தீனாளின் மரணம்
  • 2.33.மற்ற பிரயாணிகளின் முடிவு
  • 3.ஜாண் பன்னியன்
  • 3.1.மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து பாதுகாத்த தேவ கரம்
  • 3.2.தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்
  • 3.3.ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது
  • 3.4.ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்
  • 3.5.ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை
  • 3.6.தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்
  • 3.7.”என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்”
  • 3.8.ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு




Copyright © www.devaekkalam.com. All Rights Reserved.